பள்ளிவாசலுக்கு அருகில் கேளர கஞ்சா வைத்திருந்தவர் கைது

232 0

வவுனியாவில் பள்ளிவாசலுக்கு அருகில் இருந்து கேளர கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

வவுனியா பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இதன்போது சந்தேகநபர் வசம் இருந்து 2 கிலோ 15 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, கைதுசெய்யப்பட்டவர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 62 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

இன்று அவரை வவுனியா நீதவான் நிதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment