பஸ் வண்டியின் சில்லுக்குள் சிக்குண்டு பெண் பலி

261 0

அம்பாறை பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்றுக்கு விபத்துக்குள்ளாகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

அம்பாறை, செனரத் சோமரத்ன விளையாட்டு மைதானத்துக்கருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பஸ்ஸில் வந்த இந்த பெண் இறங்கி செல்லும் போது பஸ் வண்டியின் சில்லுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment