நாடளாவிய ரீதியில் தலசீமியா நோயி னால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 65 வீதமானவர்கள், தலசீமியா நோய்த்தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதாக ராகம வைத்தியசாலையின் வைத்திய ஆலோசகர் பேராசிரியர் அனுஷ பிரேமவர்தன தெரிவித்துள்ளார்.
தலசீமியா நோயின் பிரதான அறிகுறிகளுடன், குருநாகல் வைத்தியசாலையில் மாத்திரம் சுமார் ஆயிரம் நோயாளர்களுக்கும் மேற்பட்டோர் தற்போது அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தலசீமியா நோயினால் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக வும், ஆனால் இந்நோய்க்குத் தேவையான உரிய சிகிச்சைகளை உடன் பெற்றுக் கொள்வதன் மூலம் தலசீமியா நோய்த்தாக்கத்திலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.