வீதிக்காக வீதியில் இறங்கிய பளை மக்கள்

328 0

பளை பிரதேச செயலத்தை முற்றுகையிட்டு, பளையில் மக்கள் அமைதி பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.இன்று (திங்கட்கிழமை) குறித்த பேரணியினை முன்னெடுத்துள்ளனர்.

சுமார் நூற்றுக்கணக்கான மக்கள் இப்பேரணியில் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர்.புலோப்பளை வீதியை புனரமைப்பு செய்யக்கோரி இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேரணியில் கலந்துகொண்ட ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்;

2014 ஆம் ஆண்டு மீள்குடியேற்றப்பட்டோம். 2012 ஆம் ஆண்டு முதல் நாம் இந்த வீதியினை புனரமைப்பு செய்து தருமாறு அமைதியான முறையில் கோரிவருகிறோம்.

ஆனால் இதுவரை உரிய அதிகாரிகள் கருத்தில் கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நாம் தற்போது கோருவது இந்த வீதியை புனரமைத்துத் தரவேண்டும். பாடசாலை மாணவர்கள், நோயாளர்கள், பொதுமக்கள் என்று அனைவருமே அசௌகரியங்களை எதிர்கொள்கிறோம் என்று தெரிவித்தார்.

Leave a comment