அரசாங்க அனுமதிபத்திரம் இன்றி மதுபானம் அடங்கிய 50 போத்தல்களை முச்சக்கரவண்டி ஒன்றில் ஏற்றிச் சென்றவர்களை லிந்துலை பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.ரதல்ல பகுதியிலிருந்து நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியினூடாக மட்டுக்கலை பகுதிக்கு நேற்று இரவு 10.30 மணியளவில் கொண்டு செல்லப்பட்ட போதே இந்த மதுபான போத்தல்களையும், மூன்று சந்தேக நபர்களையும் முச்சக்கரவண்டியுடன் கைது செய்யப்பட்டதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை விற்பனைக்காக மதுவரி திணைக்கள அனுமதிபத்திரம் இன்றி கொண்டு செல்லப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சந்தேக நபர்களை பொலிஸ் பிணையில் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை எதிர்வரும் தினங்களில் நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.