பிலக்­கு­டி­யி­ருப்­பி­லுள்ள சுமார் 80க்கும் மேற்­பட்ட குடும்­பங்­க­ ளுக்கு நிரந்­தர வீடுகள்!

419 0

முல்­லைத்­தீவு பிலக்­கு­டி­யி­ருப்­பி­லுள்ள சுமார் 80க்கும் மேற்­பட்ட குடும்­பங்­க­ ளுக்கு நிரந்­தர வீடு­களை வழங்­கு­வ­தற்கு தேசிய வீட­மைப்பு அபி­வி­ருத்தி அதி­கார சபை இணங்­கி­யுள்­ளது.

நேற்று இடம்­பெற்ற முல்­லைத்­தீவு மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக்­கு­ழுக் கூட்­டத்­தில் இந்­தப் பிரச்­சினை ஆரா­யப்­பட்டு இறு­தி­யில் சம்­ம­தம் தெரி­விக்­கப்­பட்­டது.

இணைத்­த­லை­வ­ரான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிவ­மோ­கன் தலை­மை­யில் கூட்­டம் இடம்­பெற்­றது.

பிலக்­கு­டி­யி­ருப்பு மக்­கள் தமது காணி­களை இரா­ணு­வத்­தி­டம் இருந்து போராடி பெற்­றி­ருந்­த­னர். ஆனால் அவர்­க­ளது காணி­க­ளில் அவர்­க­ளுக்கு என்று வீடு­கள் வழங்­கப்­ப­ட­வில்லை. தற்­போது தறப்­பால் கொட்­ட­கை­க­ளில் வாழ்ந்து வரு­கின்றோம் அவர்­கள் முறைப்­பா­டு­ தெ­ரி­வித்­துத் தமக்கு வீடு­கள் அமைத்­துத் தரு­மாறு கோரி­யி­ருந்­த­னர்.

இந்த விட­யத்­தில் உரிய அதி­கா­ரி­கள் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று பிலக்­கு­டி­யி­ருப்பு சார்­பாகக் கலந்­து­கொண்ட மக்­கள் பிர­தி­நி­தி­க­ ளும் கோரி­னர். இந்த விட­யம் நேற்­றுப் பரி­சீ­ல­னைக்கு எடுக்­கப்­பட்­டது.

“மீள்­கு­டி­ய­மர்­வின் பின்­னர் குறித்த பிர­தேச மக்­க­ளுக்­கென இரா­ணு­வத்­தி­ன­ரால் வீடு­கள் அமைத்­துக்­கொ­டுக்­கப்­பட்­டன. வீடு­கள் அரச செல­வில் அமைக்­கப்­பட்­டன. அத­னால் குறித்த பிர­தேச மக்­க­ளுக்கு மீண்­டும் புதி­தாக வீடு­களை வழங்க முடி­யாத நிலை உள்­ளது” என்று மாவட்­டச் செய­லர் தெரி­வித்­தார்.

அதன்­போது குறுக்­கிட்ட பிலக்­கு­டி­யி­ருப்பு மக்­கள்­பி­ர­தி­நி­தி­கள், “அமைத்­துத் தரப்­பட்ட வீடு­ளுக்கு சரி­யான முறை­யில் அத்­தி­வா­ரம் இடப்­ப­ட­வில்லை. உரி­ய­வாறு கட்­டப்­ப­ட­வில்லை. அதனை இரா­ணு­வமே அமைத்­துத் தந்­த­னர்” என்று தெரி­வித்­த­னர்.

“அவர்­க­ளுக்கு வழங்கப்பட்டுள்ள வீடு­க­ளின் சுவர்ப் பகு­தி­க­ளில் ஒரு பக்­கத்­தில் சுரண்­டி­னால் மறு­பக்­கம் விரல் சென்­று­வி­டும். அவ்­வா­றான தரங்­கு­றைந்த வீடு­களே அமைத்­துக் கொடுக்­கப்­பட்­டுள்­ளன. அத­னால் அவர்­கள் வாழ்­வ­தற்கு ஏற்­ற­தாக அவர்­க­ளது காணி­க­ளில் உட­ன­டி­யாக வீடு­கள் அமைத்­துக்­கொ­டுக்க வேண்­டும்” என்று மாகா­ண­சபை உறுப்­பி­னர் து.ரவி­க­ரன் தெளி­வு­ப­டுத்­தி­னார்.

இந்த விட­யம் தொடர்­பில் தேசிய வீட­மைப்பு அதி­கார சபை­யி­ன­ரு­டன் இணைத் த­லை­வர் சிவ­மோ­கன் கலந்­து­ரை­யா­டி­னார்.

அவர்­க­ளுக்கு நிரந்­தர வீடு­களை அமைத்­துக்­கொ­டுக்க அதி­கார சபை­யி­னர் இணக் கம் தெரி­வித்­த­னர். அத­னைய­டுத்து குறித்த பிர­தேச மக்­க­ளுக்கு வீடு­களை அமைத்து கொடுப்­ப­தா­கத் தீர்­மா­னம் எடுக்­கப்­பட்­டது. இதில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சாந்தி சிறிஸ்­கந்­த­ரா­சா­வும் கலந்­து­கொண்­டி­ருந்­தார்.

Leave a comment