முல்லைத்தீவு மாவட்டத்தின் முதன்மை வைத்தியசாலையின் செயற்பாடுகள் தொடர்பில் மாவட்டச் செயலர் உள்ளிட்ட பலர் குற்றச்சாட்டுக்களை அடுக்கினர்.
நோயாளர்கள் மட்டுமன்றி அதிகாரிகளும் பெரும் அசௌகரியத்தினை சந்தித்தமையே வைத்தியசாலையின் வரலாறாகவுள்து என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலகத்தில் இணைத்தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே மேற்படி கருத்து பலராலும் சுட்டிக்காட்டப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்துக்கான முதன்மை வைத்தியசாலையான மாஞ்சோலை வைத்தியசாலை பெயரளவிலாள வைத்தியசாலையாக மட்டுமே உள்ளது. இங்கு நோயாளர்கள் பெரும் சிரமத்தையே எதிர்கொள்கின்றனர். இவை இன்றுவரை தீர்க்கப்படவில்லை.
அது மட்டுமன்றி அங்குள்ள மருத்துவர்களும், தாதியர்களும் பொறுப்பின்றியே செயல்படுகின்றனர். நோயாளர்களைக் கவனிப்பதே கிடையாது. எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
‘‘ஒருநாள் குருதி அழுத்தம் ( பிறசர் ) பரிசோதிக்கச் சென்ற என்னை விடுதியில் தங்கி நிற்குமாறும் அவ்வாறானால் மட்டுமே பார்வையிட முடியும் என்றும் கூறினர். அதனால் திரும்பிவந்து விட்டேன்’’ என்றார்.
மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், ‘‘ஓர் நாள் ஏற்பட்ட காயத்துக்கு அவசரமாகச் சென்ற நான் பெரும் அசௌகரியத்தினைச் சந்தித்தமையே வரலாறாகவுள்ளது. குறித்த வைத்தியசாலை தொடர்பில் புகார்களே முன்வைக்கப்படு கின்றன’’ என்றார்.
இவ்வாறு அந்த வைத்தியசாலை தொடர்பில் கூட்டத்துக்கு வந்த பலரும் குற்றச் சாட்டுக்களை அடுக்கினர்.
இறுதியில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் இது தொடர்பில் கருத்துரைத்தார்.
‘‘மாவட்ட வைத்தியசாலையின் நிர்வாகி தற்போது மாற்றப்பட்டு வைத்தியசாலை ஓரளவு சீர் செய்யப்படுகின்றது.அதன் வழியில் ஏனைய குறைபாடுக ளும் சீ்ர்செய்யப்பட்டு நேர்த்தியான சேவைக்கு வழி செய்யப்படும்” என்றார்.