2100 ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

252 0

அரசாங்கம் உயர்தரத்தில் அறிமுகம் செய்துள்ள தொழிற்துறைக்கான பாடநெறிகளை கற்பிப்பதற்கு தேவையான பட்டதாரி ஆசிரியர்களை புதிதாக இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் 2100 ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

2017.12.11 ஆம் திகதிக்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் துறைசார்ந்த பட்டப்படிப்பை முடித்துள்ளவர்கள் இந்த ஆசிரியர் நியமனத்துக்கு விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  26 பாடநெறிகளைக் கற்பிக்கத் தேவையான பட்டதாரிகள் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Leave a comment