தோட்டத் தொழிலாளர்களுக்கான மதுபானத்தின் விலை குறைக்கப்பட வேண்டும்- ஜோன் செனவிரத்ன

216 0

பியருக்கான விலையை விடவும் தோட்டத் தொழிலாளர்கள் அருந்தும் மதுபானத்துக்கு விலை குறைப்பை மேற்கொண்டால் வரவேற்கத்தக்கது என அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

தோட்ட மக்கள் தங்களது சிரமத்தை மறப்பதற்கு மாலையில் குறைந்த விலையில் உள்ள (கசிப்பு) சாராயத்தை உட்கொள்கின்றனர். இதனால் அவர்களது உடல் நலத்துக்குப் பாதிப்பு ஏற்படுகின்றது. இதிலிருந்து அவர்களை மீட்பதற்கு அவர்கள் அருந்துவதற்குள்ள மதுபான வகையின் விலையைக் குறைக்க முடியுமாயின் வரவேற்கத் தக்கது எனவும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

Leave a comment