பியர் ரக மதுபானத்தின் விலை குறைப்பினால், சட்டவிரோத சாராயத்தின் பயன்பாட்டை தடுக்க முடியாது எனவும் இவ்வாறு பியருக்கான வரி நீக்கத்தினால் அரசாங்கத்துக்கு கிடைக்கவிருந்த வருமானம் கிடைக்காமல் போவது மாத்திரமே இடம்பெறுவதாகவும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பியர் விலை குறைப்பினால் சிறுவர்களும், பெண்களும் மதுபானப் பயன்பாட்டுக்கு தூண்டப்படுவதாகவும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி உறுப்பினரான அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார். தான் இந்த நடவடிக்கை ஆதரவு வழங்கப் போவதில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்