பிரித்தானிய கடற்கரையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

317 0

sea1பிரித்தானிய கிழக்கு சசக்ஸ் பகுதியிலுள்ள கடற்கரையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தக் கடற்கரை பகுதியில் ஐந்து தமிழ் இளைஞர்கள் உயிரிழந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன் கிழமை குறித்த கடற்கரையில், 5 தமிழ் இளைஞர்கள் புதை மணலில் புதையுண்டு உயிரிழிந்தனர்.

இந்நிலையில், குறித்த கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அங்குவருபவர்களுக்கு பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கவும் உயிர்பாதுகாப்பு பணியாளர்கள் அங்கு நிறுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.