வவுனியாவில் 6 கிலோ 420 கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

256 0

வவுனியா நகரில் ஒருதொகை கேரள கஞ்சாவுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றஇரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், சந்தேகநபர்கள் வசம் இருந்து 6 கிலோ 420 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர்கள் திருகோணமலை மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 23, 30 மற்றும் 33 வயதான மூவர் எனத் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களை இன்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

Leave a comment