பாரிஸ் காலநிலை மாற்ற உடன்படிக்கை

388 0

பாரிஸ் காலநிலை மாற்ற உடன்படிக்கையில் சிரியாவும் கைச்சாத்திடவுள்ளதாக அறிவித்துள்ளது.

2015ம் ஆண்டு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கை, உலக காலநிலை மாற்றத்திற்கு ஏற்க பூமி வெப்பமடைவதை தடுப்பதற்கு பல்வேறு நாடுகள் இணக்கம் தெரிவித்தன.

இதில் சிரியாவும் நிக்கரகுவாவும் மாத்திரமே கைச்சாத்திடவில்லை.

அதேநேரம் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியானதன் பின்னர், இந்த உடன்பாட்டில் இருந்து அமெரிக்காவை வெளியேறச் செய்தார்.

தற்போது குறித்த உடன்படிக்கையில் சிரியாவும் கைச்சாத்திடும் நிலையில், அமெரிக்கா தனிமைப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment