இந்தியாவிலிருந்து கடந்த இரண்டு மாத காலத்திற்குள் 1300 மில்லியன் ரூபா பெறுமதியான அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழுவின் தீர்மானத்திற்கு அமைவாக 20 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசி, இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அத்தொகை முழுவதும் சந்தைக்கு விநியோகத்திற்கென அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் நாட்டரிசியானது கிலோகிராம் 74ரூபாவுக்கு விற்கப்பட்டுவருவதோடு 25கிலோவிற்கு மேற்பட்ட அரிசியை கொள்வனவு செய்பவருக்கு கிலோகிராம் 73 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ள 30ஆயிரம் மெற்றிக்தொன் சம்பா அரிசியில் 15ஆயிரம் மெற்றிக்தொன் சம்பாவுக்கான கட்டளைகள் அந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு இம்மாத நடுப்பகுதியில் அந்த அரிசியானது நாட்டை வந்தடையவுள்ளது. குறித்த தொகை அரசி இறகுமதிக்கு அரசாங்கம் 926மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.