விபத்தில் 4 காவல்துறையினர் காயம்

272 0

வெல்லவாய – எதிலிவௌ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் காவல்துறை அதிகாரிகள் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

காவல்துறையினர் பயணித்த ஜீப் வண்டிக்கு பின்னால் வந்த பாரவூர்த்தி ஒன்று மோதியதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்றிரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த 4 காவல்துறையினரும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் விபத்து ஏற்படும்வேளையில் மதுபோதையில் இருந்ததாக காவல்துறையினரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Leave a comment