பண்டிகை காலத்தில் விசேட விலைக்கழிவில் பொருட்கள்

290 0

எதிர்வரும் பண்டிகை காலத்தில் பொருட்களின் விலைகளை குறைக்க விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

தங்கல்லையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இவர் இதனைக் குறிப்பிட்டார்.

சந்தையில் பொருட்களின் விலை அதிகரித்துச் சென்றுள்ளதை அரசாங்கம் அறிந்துள்ளதாகவும், அதனை நிவர்த்திக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனிடையே இந்த முறை முன்வைக்கப்படவுள்ள பாதீட்டில், மக்களின் வாழ்க்கைச் செலவை குறைத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பல யோசனைகள் முன்வைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

Leave a comment