யாழ்ப்பாணத்தில் போலி நாணய நாள்களை அச்சிட்ட கணவன்-மனைவி கைது

376 0

போலி நாணய தாள்கள் அச்சிட்ட கணவன் மற்றும் மனைவியை யாழ்ப்பாணம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை நெளுக்குளம் பகுதியில் உள்ள வீட்டினை, நேற்றிரவு சுற்றிவளை காவல்துறையினர் இவர்களை கைது செய்தனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது, நாணயத் தாள்களை அச்சிட்ட 2 அச்சி இயந்திரங்கள், ஸ்கோனர் இயந்திரம், மடிக்கணினி மற்றும் 5 ஆயிரம் ரூபா நாணயத் தாள்கள் 400, மற்றும் 1000 ரூபா நாணயத் தாள்கள் 148வும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்கள் போலி நாணயங்களை அச்சிட்ட குற்றச்சாட்டில் முன்னரும் தேடப்பட்டவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a comment