விசாரணைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் – முன்னாள் ஜனாதிபதியின் பிரதம அதிகாரி

222 0

பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் தனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதியின் பிரதம அதிகாரி காமினி செனரத், உயர்நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

தன்னைக் கைதுசெய்வதை தவிர்க்குமாறு உத்தரவிடக் கோரி, காமினி செனரத் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, இந்த விடயத்தை நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தினார்.

மேலும், தேவையான வாக்குமூலத்தை வழங்க எதிர்வரும் 9ம் திகதி காமினி செனரத் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகத் தயாராக உள்ளதாகவும் அவரது சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, காமினி விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவாராயின் அவரைக் கைதுசெய்வது தொடர்பான பிரச்சினை எழப்போவதில்லை என, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இதன்போது தெரிவித்தார்.

விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் அடுத்த கட்ட வழக்கு விசாரணையை எதிர்வரும் 17ம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment