நாட்டின் பல பிரதேசங்களில் மழை

380 0

இன்றைய தினம் நாட்டின் பல பிரதேசங்ளில் 100 மில்லி மீட்டர் வரையில் கடுமையான மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், மத்திய, சபரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் கடுமையான மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

மழை பொழியும் போது தற்காலிகமாக கடுமையான காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கத்தில் இருந்து அவதானமாக இருக்குமாறு அத் திணைக்களம் மக்களை கோரியுள்ளது.

Leave a comment