ஞானவைரவர் ஆலயம் உடைக்கப்பட்டு நகைகள், பணம் : வவுனியாவில் சம்பவம்

241 0

வவுனியா வைரவபுளியங்குளம் ஞானவைரவர் ஆலயம் உடைக்கப்பட்டு நகைகள், பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.நேற்று இரவு உடைக்கப்பட்டு குறித்த பொருட்கள் திருடப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

விசேட அபிஷேகங்களுடன் பூஜை இடம்பெற்றமையினால் மூலஸ்தான விக்கிரகத்தில் அணியப்பட்டிருந்த 2 பவுண் சங்கிலி திருடப்பட்டுள்ளதுடன் வேறு பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

காலை பூஜைகளுக்காக ஆலய பூசகர் கதவை திறந்தபோதே பூட்டு உடைக்கப்பட்டதை அவதானித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment