ஹம்பாந்தோட்டை துறைமுகம் – டிசம்பர் முதல் சீனா நிறுவனத்திடம்

16591 126

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாக பணிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் சீனா நிறுவனம் பொறுப்பேற்கவுள்ளது.

இந்த துறைமுகம் தொடர்பான உடன்படிக்கை அண்மையில் சீன நிறுவனம் ஒன்றுடன் செய்து கொள்ளப்பட்டது.

இதற்கமைய குறித்த நிறுவனம் சீனாவிற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் பொறுப்பளிக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் பெறப்படும் வருமானத்தின் மூலம் இலங்கையின் கடன்தொகையை அடைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a comment