ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அதிரடி தீர்மானம்

4415 0

ஒரே கூட்டணியாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில், கட்சிகளுக்கிடையிலான வேட்பாளர்களின் எண்ணிக்கை குறித்து தற்போது கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வேட்புமனுத் தாக்கலுக்கான அறிவிப்பு விடுக்கப்படுவதற்கு முன்னர், வேட்பாளர்கள் தொடர்பில் முழுமையான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு பேச்சுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஒரே இலட்சணையின்கீழ் போட்டியிட ஏனைய கட்சிகள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Leave a comment