741 பொதுமக்களுக்கு மரண தண்டனை

425 0

ஈராக்கின் மோசுல் நகரில் குறைந்தபட்சம் 741 பொதுமக்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் மரண தண்டனைக்கு உள்ளாக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை இதனைத் தெரிவித்துள்ளது.

அத்துடன் தீவிரவாதிகள் மிகப்பெரிய அளவிலான மனித கடத்தல்களையும் நடத்தி இருப்பதுடன், பொதுமக்களை மனித கேடயங்களாகவும் பயன்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஈராக்கிய படையினர் மேற்கொண்ட குற்றங்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் {ஹசைன் இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a comment