கட்டலோனிய பிராந்திய முன்னாள் அமைச்சர்கள் சிறையில்

1053 0

கட்டலோனியா பிராந்தியத்தின் முன்னாள் அமைச்சர்கள் எண்மர் ஸ்பானிய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஸ்பெயினில் இருந்து கட்டலோனியாவைப் பிரித்து தனிநாடாக அறிவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டமைக்காக அவர்கள் கைதாகியுள்ளனர்.

 

ஸ்பெயினின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட பிராந்தியமாக இருந்த கட்டலோனியாவை, தனிநாடாக மாற்றுவதற்கு மக்கள் கருத்துக் கணிப்பில் அனுமதிக்கப்பட்டது.

எனினும் இந்த கருத்துக் கணிப்பை ஸ்பெயின் நீதிமன்றம் தடைசெய்ததுடன்,பிந்தியத்தின் தன்னாட்சி அதிகாரத்தையும் ஸ்பெயின் அரசாங்கம் ரத்து செய்துள்ளது.

இந்த நடவடிக்கைகளை வழிநடத்திய அந்த பிராந்தியத்தின் முன்னாள் தலைவர் கார்லெஸ் உள்ளிட்ட 5 முக்கியஸ்த்தர்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பிடிவிராந்தி பிறப்பிக்க கோரப்பட்டுள்ளது.

Leave a comment