பயங்பரவாத்திற்கு எதிராக போரிட மோடி – ட்ரம்ப் உறுதி

292 0

பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து போராட பிரதமர் மோடியும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் உறுதி பூண்டுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் கீழ்மேன்ஹட்டன் பகுதியில் கடந்த 31ஆம் திகதி பாதசாரிகள் மீது லொரியை ஏற்றி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 8 பேர் உயிரிழந்ததுடன், 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்புக்குப்பின் நிகழ்ந்த மிகப்பெரிய தாக்குதலாக கருதப்படும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட சைபோவ் என்ற பயங்கரவாதியை காவற்துறை சுட்டுப்பிடித்தனர்.

குறித்த தாக்குதலை தாம் மேற்கொண்டதாக ஐ எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்த கொடூர தாக்குதலுக்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இதில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a comment