மனித உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!-ரணில்

362 0

இலங்கையில் மனித உரிமைகளை முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2017 முதல் 2021ம் ஆண்டுகளுக்கான மனித உரிமை செயற்றிட்டத்தை வெளியிட்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அங்கு உரையாற்றிய பிரதமர், கடந்த காலங்களில் மனித உரிமைகள் தொடர்பான கரிசனைகள் இருந்தாக சுட்டிக்காட்டினார்.

தற்போது புதிய அரசாங்கம் பதவி ஏற்றதன் பின்னர் மனித உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment