தமிழ்செல்வனின் 10ம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

11186 0

முன்னாள் தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்செல்வனின் 10 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு தாமரைக்கேணி காரியாலயத்தில் இந்நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் கட்சி மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் மற்றும் ஆதரவாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு, தமிழ்செல்வனின் உருவப்படத்திற்கு சுடர்ஏற்றி மலர்மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2007ம் ஆண்டு கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் மீது இடம்பெற்ற விமான குண்டு தாக்குதலில் தமிழ்செல்வன் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment