வவுனியா சித்தி விநாயகர் ஆலய நவக்கிரகங்களை உடைத்தெறிந்த விஷமிகள்

331 0

வவுனியா செட்டிகுளம், முகத்தான் குளம் சித்திவிநாயகர் ஆலய நவக்கிரங்கள் இனந்தெரியாத விசமிகளால் உடைத்து வெளியே எறியப்பட்டுள்ளதுடன் சில சிலைகளுக்கும் சேதமாக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (01) இரவு இடம்பெற்றுள்ளது.

வவுனியா, செட்டிகுளம், முகத்தான்குளம் பகுதியில் அண்மையில் கும்பாவிசேகம் செய்யப்பட்ட சித்தி விநாயகர் ஆலய வளாகத்தில் இருந்த நவக்கிரகங்கள் விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆலயத்தின் சிலைகளும் சேதமாக்கப்பட்டுள்ளது.

காலை ஆலயத்திற்கு சென்றவர்கள் ஆலயத்தின் சிலைகள் உடைக்கப்பட்டு இருப்பதை அவதானித்து பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செட்டிக்குளம் பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment