13 இந்திய மீனவர்கள் நெடுந்தீவுக் கடலில் கைது!

269 0
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் 13 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என கடற்படையினர் தெரிவித்தனர். அவர்களின் 3 படகுகளும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நெடுந்தீவில் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களும் தற்போது கடற்படை முகாமில் தடுத்துவைகக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படுவர் என்றும் கடற்படையினர் தெரிவித்தனர்.

Leave a comment