புதிய கடற்படை தளபதி – இராஜாங்க அமைச்சர் சந்திப்பு

339 0

புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை சந்தித்தார்.

22ஆவது கடற்படையின் புதிய தளபதி தனது கடமைகளை பொறுப்பெற்ற பின்னர் உத்தியோகபூர்வமாக பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது சினேக பூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுடன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் புதிய கடற்படைத் தளபதிக்கு தமது வாழ்த்துக்களையும் இதன்போது தெரிவித்தார்.

இந்த நிகழ்வினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

Leave a comment