வீதி ஒழுங்குகளை முறையாகக் கடைப்பிடித்த சாரதிகளுக்குக் கௌரவிப்பு

254 0

வீதி ஒழுங்குகளை முறையாகக் கடைப்பிடித்து வாகனங்களைச் செலுத்திய சாரதிகளைக் கௌரவிக்கும் நிகழ்வொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கு இணங்க ஆரம்பிக்கப்பட்டுள்ள, வீதி ஒழுங்குகளை முறையாகக் கடைப்பிடித்து வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிந்து பெறுமதிமிக்க பரிசுகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.,

ஒரு மாத குறுகிய காலப்பகுதியில் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாரதிகள் கண்டறியப்பட்டிருப்பதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.

வீதி ஒழுங்கு விதி முறைகளை மதித்துச் செயற்படும் சாரதிகளைக் கண்டறிவதற்கான வேலைத்திட்டம் கொழும்பு கண்டி குருநாகல் போன்ற நகரங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரில் மாத்திரமே தற்போது வீதி ஒழுங்கு விதிமுறைகளை மதித்துச் செயற்படும் சாரதிகள் கண்டறிப்பட்டிருப்பதாக பொலிஸ் மா அதிபர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தச் சாரதிகளுக்கு ஒழுக்க விதிமுறைகளை மதிக்கும் சான்றிதழ்களும் பரிசுகளும் இதன்போது வழங்கப்பட்டுள்ளன.

Leave a comment