அபிவிருத்தி நடவடிக்கைகள் இன்னும் 2 வருடங்களில் துரிதமாக நிறைவு செய்யப்படும்-ரணில் விக்ரமசிங்க

214 0

நாட்டில் நிலவுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளை இன்னும் இருவருடங்களில் துரிதமாக நிறைவு செய்ய நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

“மெத் சந்த செவன” வீட்டு திட்டத்தின் ஒரு கட்ட நிகழ்வாக மாதம்பிட்டிய ஹேனமுள்ள பிரதேசத்தில் 218 வீடுகளை பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாடு முகங்கொடுத்து வருகின்ற கடன் தொல்லை காரணமாக இடம்பெற்ற பொருளாதார நெருக்கடி காரணமாகவே கடந்த இரண்டு வருடங்களாக அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியாது சென்றதாக அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment