சைட்டம் இரத்து தொடர்பில் முழுமையான தகவல்

214 0

மாலபே தனியார் மருத்­துவக் கல்­லூ­ரியை இரத்து  செய்து, அதனை இலாப நோக்­க­மற்ற புதிய நிறு­வ­ன­மாக ஸ்தாபிப்­ப­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. மேலும், சைட்டம் மருத்­துவக் கல்­லூ­ரிக்கு பதி­லாக வர­வுள்ள நிறு­வனம், உயர்­கல்வி அமைச்சு மற்றும் பல்­க­லைக்­க­ழக மானி­யங்கள் ஆணைக்­கு­ழுவின் கண்­கா­ணிப்பின் கீழ் இயங்­க­வுள்­ள­தா­கவும் அர­சாங்கம் நேற்று அறி­வித்­துள்­ளது.

இது தொடர்பில் அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்­தினால் நேற்று வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

சைட்டம் நிறு­வ­னத்தின் மருத்­துவ பீடம் தொடர்­பாக எழுந்­துள்ள சிக்­கல்­களை தீர்த்­துக்­கொள்ளும் நோக்கில் ஜனா­தி­ப­தி­யி­னாபல்   நிய­மிக்­கப்­பட்ட குழு­வினால், அரச பல்­க­லைக்­க­ழ­கங்­களின் மருத்­து­வ­பீட பீடா­தி­ப­திகள் உட்­பட பல தரப்­பி­னர்­க­ளி­ட­மி­ருந்து யோச­னைகள் பெறப்­பட்­டன.   அவ்­வாறு பெறப்­பட்ட  பரிந்­து­ரை­களை கருத்­திற்­கொண்டும் சகல தரப்­பி­ன­ருக்கும் நியா­ய­மா­கவும் அர­சாங்­கத்தின் கொள்­கைக்கு மாற்றம் இல்­லா­மலும்  நிலை­யான தீர்­வொன்றை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கா­கவும்   நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

சைட்டம் பிரச்­சினை கார­ண­மாக  தற்­போது பல்­க­லைக்­க­ழ­கங்­களில் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்கு   ஏற்­பட்­டுள்ள தடை­களை அகற்றி, மீண்டும் மாண­வர்கள் கல்வி நட­வ­டிக்­கை­களில்  கலந்­து­கொள்ள சந்­தர்ப்­பத்தை   ஏற்­ப­டுத்­திக்­கொ­டுப்­ப­தற்­காக  ஜன­நா­ய­கத்­துக்கு மதிப்­ப­ளித்து உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்த அனைத்து தரப்­பி­னரும்  ஒத்­து­ழைப்பு வழங்­கு­வது காலத்தின் தேவை­யாகும். சகல தரப்­பி­ன­ருக்கும் நீதி­யான தீர்­வொன்று என்ற அடிப்­ப­டையில் கீழ்­வரும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்கு அர­சாங்கம் எதிர்­பார்க்­கின்­றது.

அனைத்து தரப்­பி­ன­ருக்கும் நீதி­யான  தீர்வு ஒன்றை எடுத்தல்   என்ற மூல­தர்­மத்தின் அடிப்­ப­டையில் பின்­வரும் நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

1.  சைட்டம் நிறு­வ­னத்­தினை (தற்­போ­தி­லி­ருந்து சைட்டம் என்று இனங்­காண்­பது அதன் மருத்­துவ பீட­மாகும்) இல்­லா­தொ­ழிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கின்­றது.   

தற்­போ­தி­ருக்­கின்ற பங்­கு­தா­ரர்கள்¸ கடன் வழங்கும் நிறு­வ­னங்கள் மற்றும்  சைட்டம் மருத்­துவ பீடத்தின் அனைத்து நட­வ­டிக்­கைகள்  முகா­மைத்­துவம் செய்­வ­தற்கு விருப்பம் தெரி­விக்­கின்ற¸ புதிய நிறு­வ­னத்­தினை சட்ட ரீதி­யாக ஏற்­றுக்­கொள்­கின்ற  வகையில்¸ சைட்டம் நிறு­வ­னத்தில் காணப்­ப­டு­கின்ற உரிமம் மற்றும் முகா­மைத்­துவ கட்­ட­மைப்பு என்­பவை இல்­லா­தொ­ழிக்­கப்­படும். 

இங்கு¸ வைத்­தியர் நெவில் பிர­னாந்து மற்றும் அவ­ரது குடும்­பத்தார் உரி­மை­யுடன் இலா­ப­நோக்­கத்­துடன் முன்­னெ­டுத்து வந்த நிறு­வனம் இல்­லா­தொ­ழிக்­கப்­ப­டு­கின்­றது.

2. இப்­பங்­கு­தா­ரர்­க­ளுக்­கி­டையில் ஏற்­ப­டுத்திக் கொள்­கின்ற ஒப்­பந்­தத்தின் மூலம் சைட்டம் நிறு­வ­னத்தின் சொத்­துக்கள்¸ பொறுப்­புக்கள்¸ பணி­யா­ளர்கள் மற்றும் மாண­வர்கள் ஆகி­யோரை மருத்­துவ கல்வி மற்றும் பயிற்சி தொடர்பில் காணப்­ப­டு­கின்ற ஆகக் குறைந்த தரத்தின் அடிப்­ப­டையில் (சட்­ட­ம­ய­மாக்­கப்­பட வேண்டும்) ஸ்தாபிக்­கப்­ப­ட­வுள்ள மருத்­துவ பட்­ட­ம­ளிக்க  முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள புதிய, அரச சார்­பற்ற மற்றும் இலாப நோக்­க­மற்ற நிறு­வ­னத்­துக்கு ஒப்­ப­டைக்க வேண்டும். (செல­வினை மிஞ்­சிய இலாபம் பெறப்­படும் போது அதனை பங்­கு­தா­ரர்­க­ளி­டத்தில் பிரித்துக் கொள்­ளாது நிறு­வ­னத்தின் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கைகள் மற்றும் ஆராய்ச்­சி­க­ளுக்கு அல்­லது மாண­வர்­க­ளுக்கு பெற்­றுக்­கொள்­வ­தற்­காக பயன்­ப­டுத்­தல்­வேண்டும்) 

3,இந்­நோக்­கத்­துக்­காக உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள இலாப நோக்­க­மற்ற நிறு­வ­னத்­தினை ஸ்தாபிப்­ப­தற்­காக தற்­போது நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள அரச சார்­பற்ற¸ இலாப நோக்­க­மற்ற தரப்­பி­னர்­க­ளுடன் அர­சாங்கம் ஆரம்ப கட்ட பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்­டுள்­ளது. இது தொடர்பில் விருப்பம் தெரி­விக்­கின்ற தரப்­பி­னர்­க­ளுடன் மிகவும் துரித கதியில் தொடர்­பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொள்ள தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

4,தேவை­யான தகை­மை­களை கொண்ட¸ தற்­போது சைட்டம் நிறு­வ­னத்தின் மூலம் சேர்த்துக் கொள்­ளப்­பட்­டுள்ள சகல மாண­வர்­க­ளையும் புதிய நிறு­வ­ன­மா­னது ஏற்றுக் கொள்ள வேண்டும். ஸ்தாபிக்­கப்­பட உள்ள புதிய நிறு­வ­னத்­தினுள் இம்­மா­ண­வர்­க­ளுக்கு மருத்­துவ கல்­வி­யினை பெற்றுக் கொள்­வ­தற்கு வாய்ப்பு கிடைக்­கின்­றது.

4,சைட்டம் நிறு­வ­னத்தில் மருத்­துவ பட்டம் பெற்ற மாண­வர்கள் எதிர்­நோக்கி உள்ள பிரச்­சி­னைகள்¸ அது தொடர்பில்  நீதி­மன்றம் முன்­வைத்­துள்ள தீர்ப்­பினை அடிப்­ப­டை­யாகக் கொண்டு¸ இலங்கை மருத்­துவ சபையின் ஆலோ­ச­னையின் அடிப்­ப­டையில் தீர்த்­து­வைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும். சைட்டம் நிறு­வ­னத்தில் மருத்­துவ பட்டம் பெற்ற மாண­வர்­க­ளுக்கு சிபார்சு செய்­யப்­ப­டு­கின்ற அரச வைத்­தி­ய­சா­லை­களில் பயிற்­சி­களை பெற்றுக் கொள்­வ­தற்கு வாய்ப்­புகள் செய்து கொடுக்­கப்­படும்.

6, உயர் கல்வி அமைச்சின் செய­லா­ள­ரினால் 2017ஆம் ஆண்டு செப்­டம்பர் மாதம் 15ஆம் திகதி வெளி­யி­டப்­பட்­டுள்ள கடி­தத்தின் மூலம் சைட்டம் நிறு­வ­னத்­துக்கு புதி­தாக மாண­வர்கள் இணைத்துக் கொள்­வது இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளது. இந்த இடை­நி­றுத்தம் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­படும். அத­ன­டிப்­ப­டையில்¸ இதன் பின்னர் அனைத்து புதிய அனு­ம­திகள்  மருத்­துவ கல்வி மற்றும் பயிற்­சிகள் தொடர்­பான ஆகக் குறைந்த தரத்தின் அடிப்­ப­டையில் (சட்­ட­மாக்­கப்­பட வேண்டும்) ஸ்தாபிக்­கப்­பட உள்ள முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள புதிய நிறு­வ­னத்­தினால் (மேற்­கூ­றப்­பட்ட 02ம் இலக்­கத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள) மாத்­தி­ரமே முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும். 

குறைந்த வரு­மானம் பெறு­கின்ற குடும்­பங்­களில் தகை­மைகள் பூர்த்­தி­யா­கின்ற மாண­வர்­க­ளுக்கு வகுப்புக் கட்­ட­ணங்­க­ளுக்­காக செல­வி­டப்­ப­டு­கின்ற தொகை­யினை பெற்றுக் கொடுப்­ப­தற்­காக வேண்டி நிதி நிறு­வ­னங்கள் மற்றும் சலுகை அடிப்­ப­டை­யி­லான மாணவர் கடன் திட்­டங்­களின் மூலம் பெற்றுக் கொடுக்க முடி­யு­மான அனைத்து வச­தி­களும் அர­சாங்­கத்­தினால் பெற்றுக் கொடுக்­கப்­படும்.

7,புதிய நிறு­வ­னத்தின் உரிமை மற்றும் முகா­மைத்­துவம் என்­ப­வற்­றுக்­காக சைட்டம் நிறு­வ­னத்தின் தற்­போ­தைய பங்­கு­தா­ரர்கள் தொடர்­பு­படக் கூடாது. இது தொடர்பில் வைத்­தியர் நெவில் பிர­னாந்து  மற்றும் அக்­கு­டும்பம் வழங்­கு­கின்ற ஒத்­து­ழைப்பு மிகவும் முக்­கி­ய­மாகும்.

8, இலங்கை மருத்­துவ சபை¸ சட்­ட­மா­திபர் மற்றும் ஏனைய உரிய பங்­கு­தார்­க­ளுக்கு இடையில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களின் இணக்­கப்­பா­டு­களின் அடிப்­ப­டையில் இலங்கை மருத்­துவ சபை முன்­வைத்த சட்­ட­மூ­லத்­துக்கு அமை­வாக மருத்­துவ கவ்வி மற்றும் பயிற்சி தொடர்­பி­லான ஆகக் குறைந்த தர­மா­னது சுகா­தார அமைச்சின் மூலம் வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­பட உள்­ள­துடன்¸ பின்னர் அவை பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­படும். இது இன்­றி­லி­ருந்து கட்­டா­ய­மாக ஒரு மாதத்­திற்குள் செய்து முடிக்­கப்­பட வேண்டும்.

மேலும்  பின்­வரும் ஒழுங்கு முறையின் அடிப்­ப­டையில் மேற்­கூ­றப்­பட்ட நட­வ­டிக்­கைகள் இடம்­பெற வேண்டும்.

1,ஏற்றுக் கொள்­ளப்­பட்ட மருத்­துவ கல்வி மற்றும் பயிற்சி தொடர்­பி­லான ஆகக் குறைந்த தர­மா­னது சுகா­தார அமைச்சின் மூலம் வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­ப­டுதல் மற்றும்  பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பித்தல்.

2, உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள இலாப நோக்­க­மற்ற நிறு­வ­னத்­துக்கு சொத்­துக்கள்¸ பொறுப்­புக்கள்¸ பணியாளர்கள் மற்றும் மாணவர்களை ஒப்படைப்பதற்காக சைட்டம், தெரிவு செய்யப்பட்ட தரப்பினர் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் ஒப்பந்தத்துக்கு வருதல்.

3, உயர் கல்வி அமைச்சின் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் மேற்பார்வையின் கீழ் புதிய நிறுவனத்தினை ஸ்தாபித்தல்.

4,சைட்டம் நிறுவனத்தினை இல்லாதொழித்தல்: சைட்டம் நிறுவனத்துக்கு உரித்தான சொத்துக்கள்¸ பொறுப்புகள்¸ பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் புதிய நிறுவனத்துக்கு ஒப்படைத்தல்.

5,மருத்துவ பட்டத்தினை வழங்கும் புதிய¸ இலாப நோக்கமற்ற நிறுவனத்தினை ஆரம்பித்தல்

மேற்கூறப்பட்ட செயற்றிட்டங்களை செயற்படுத்துவதற்கு ஒருங்கிணைப்பதற்காக உயர் மட்டத்திலான அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றினை துரித கதியில் நியமிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இம்முழு செயன்முறையும் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்பதாக கட்டாயமாக பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

Leave a comment