ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய மெதமுல்ல பகுதியில் மின்னல் தாக்கி மூவர் பலி!

277 0

ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய மெதமுல்ல பகுதியில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளனர்.

வயலில் வேலை செய்து கொண்டிருந்த போதே குறித்த மூவரும் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது,  வீரகெடிய – கல்போத்தயாய பிரதேசத்தினை சேர்ந்த  65 மற்றும் 30 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடன் செயற்படுமாறு காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a comment