மைத்திரியுடன் மஹிந்த இணைவது குறித்து 01 ஆம் திகதி தீர்மானம்

266 0

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிபெறச் செய்யும் நடவடிக்கை குறித்து கலந்துரையாடுவதற்கு வருமாறு விடுக்கப்பட்டுள்ள அழைப்புக்கு பதிலளிப்பதா? இல்லையா என்பது குறித்து கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்கள் எதிர்வரும் 01 ஆம் திகதி புதன்கிழமை கூடி தீர்மானம் எடுக்கவுள்ளனர்.

புதன்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள இக்கலந்துரையாடலுக்கு கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்கள் சகலரும் கலந்துகொள்ளவுள்ளதாக சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ ல.சு.க.யின் வெற்றி குறித்து ஆராயும் கூட்டம் எதிர்வரும் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment