வெலே சுதா மீதான வழக்கு ஒத்திவைப்பு

289 0

welesudaaஹெரோயின் 6.7கிலோகிராமை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு சிறைத்தண்டனைப் பெற்று வரும் வெலே சுதாவின் வழக்கு நவம்பர் மாதம் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றில் இடம்பெறவிருந்த நிலையில், இந்த வழக்கினை விசாரிக்கும் நீதிபதி மனிலால் லைத்தியதிலக இன்று நீதிமன்றத்துக்கு சமுகம் அளிக்காததால் இந்த வழக்கு மீதான் விசாரணை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு நீதிபதி மொராயஸினால் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.