அம்பகமுவ பிரதேச சபையை பிரிக்க முடியாது – நீதிமன்றம் செல்ல தயார்

293 0

சிங்கள் மக்கள் செறிந்து உள்ள பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியிலிருந்து தமிழ் மக்கள் செறிந்து வாழும் மஸ்கெலியா பிரதேசத்திற்கு சிவனொளிபாதமலை உள்வாங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிதிமன்றம் செல்ல தயாராகி வருவதாக மலையக முற்போக்கு மக்கள் இயக்கத்தின் தலைவரும் முன்னாள் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினருமாகிய எலப்பிரிய நந்தராஜ் தெரிவித்தார்.

கினிகத்தேன பௌத்த விகாரையில் (28) இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்

அம்பகமுவ பிரதேச சபையை – மஸ்கெலியா, நோர்வூட் மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகள் என மூன்றாக பிரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு பிரிக்கப்படுவதனால் சிங்கள் மக்கள் அதிமாக வாழும் அம்பகமுவ பிரதேச சபை பகுதியிலிருந்து பிரிந்து சிவனொளிபாதமலை தமிழ் மக்கள் அதிகம் வாழும் மஸ்கெலியா பிரதேச சபை பகுதிக்குள் உள்வாங்கப்படுவதனால் சிவனொளிபாதமலை சிங்கள் மக்கள் கைகளை விட்டு விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மஸ்கெலியா பிரதேச சபை பகுதிக்குள் சிவனொபாதமலை செல்லுமிடத்து அதற்கு எதிராக நீதிமன்ற உதவியை நாட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது மூவின மக்களும் வாழும் அம்பகமுவ பிரதேச சபை பிரிக்கப்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் ஒற்றுமை குழையும் நிலை ஏற்படுவதனால் அம்பகமுவ பிரதேச சபையை துண்டாட அனுமதிக்க போவதில்லை என அவர் தெரிவித்தார்.

Leave a comment