கட்சிக்கு எதிராக செயற்படுபவர்களின் தலையெழுத்து மாறும்

310 0

mil-mp-150x141இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் அனுபவத்தின் படி கட்சி அல்லது கட்சியின் தலைவருக்கு எதிராக செயற்பட்டால் அவர்களது தலையெழுத்து மாற்றப்படும் என முன்னாள் அமைச்சர் மில்ரோய் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பெற்றுக்கொடுத்தது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கட்சியின் தலைவரை ஏற்காவிட்டால் அவர்களது உறுப்பினர் பதவி பறிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் லலித் அத்துலத்முதலி, காமினி திசாநாயக்க, ஜீ.எம்.பிரேமசந்திர உள்ளிட்டவர்கள் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவை எதிர்த்தமையினால் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இம்முறையும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது உறுதி என்றும் முன்னாள் அமைச்சர் மில்ரோய் பெர்னான்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.