யாழ் – மண்டைதீவுக் கடற்பரப்பில் சட்டவிரேதமான முறையில் கடலட்டை பிடித்த இருவருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் யாழ்.குருநகர் பகுதியினைச் சேர்ந்த இருவர் மண்டைதீவு கடற்பரப்பில் மீண்பிடியில் ஈடுபடுவது போன்ற வெளித்தோற்றத்தினை ஏற்படுத்திக் கொண்டு சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்துள்ளனர்.
இச் சட்டவிரோதமான செயற்பாடு தொடர்பாக யாழ்.கடற்றொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் கடலட்டை பிடித்த இருவரையும் கைது செய்துள்ளதுடன், கடலட்டையினையும் கைப்பற்றியுள்ளனர்.
இவர்களுக்கு எதிராக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இவருரும் மன்றில் குற்றத்தினை ஒப்புக் கொண்டனர்.
இதனையடுத்து இருவரையும் குற்றவாளியாக கருதி தலா 12 ஆயிரத்து 500 ரூபா அபராதம் செலுத்துமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் உத்தரவிட்டிருந்தார்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

