அனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் நீடிப்பு

393 0

anura senanayake_CIமுன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலை தொடர்பில் அனுர சேனாநாயக்க கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி வசீம் தாஜூடீன் வாகன விபத்து ஒன்றில் மரணமானதாக காவல்துறையினர் அறிவித்திருந்தனர்.எனினும், நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பு ஏற்றுக்கொண்டதன் பின்னர் நடத்திய விசாரணைகளின் போது இது கொலை என குற்றம் சுமத்தப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த சம்பவத்தின் சந்தேக நபர்களில் ஒருவராக அனுர சேனாநாயக்க கருதப்படுகின்றார்.
அனுர சேனாநாயக்கவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.