ஆபாச வீடியோக்களை காண்பித்தவர்  கைது

235 0
திருகோணமலை -ரொட்டவெவ பகுதியில்  சிறு வயதுடைய மருமகளை முச்சக்கர வண்டியில் அழைத்து  சென்று இரவில் தனது  வீட்டில் தூங்க வைத்து ஆபாச வீடியோக்களை காண்பித்த மாமனாரை இன்று (26) காலை கைது செய்துள்ளதாக மொறவெவ  பொலிஸார்  தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே இடத்தைச்சேர்ந்த  42 வயதுடையவர் எனவும் தெரியவருகின்றது.
சம்பவம் குறித்து  தெரியவருவதாவது ரொட்டவெவ பகுதியில் உள்ள அம்மம்மாவின் வீட்டிற்கு வருகை தந்திருந்த  போது  அவ்வீட்டிலுள்ள சிறார்கள் இருவருக்குமிடையில் சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து  அவ்வீட்டிற்கு வருகை தந்த மாமனார் சண்டை பிடிக்க வேண்டாம் என்று கூறி விட்டு தாயார் இருக்குமிடத்திற்கு அழைத்துச்செல்கின்றேன் என சொல்லி அழைத்துச்சென்று மாமனாரின் வீட்டில் உறங்க வைத்து இன்று காலை 5.00மணியளவில் வீட்டிற்கு அனுப்பியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை தாயார் எங்கிருந்து இந்த நேரத்தில் வருகின்றாய் என வினவியபோது சிறுமி இரவு நடந்த சம்பவங்களை கூறியதாகவும் அதனையடுத்து  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  செய்ததாகவும் தெரியவருகின்றது.
சம்பவம் குறித்து  மாமனாரை கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்
பொலிஸ் 026-2225822
பொறுப்பதிகாரி 071-8591198

Leave a comment