இனவாதத்தின் எதிரொலி தமிழ், முஸ்லிம் மாணவர்கள் வெளியேற்றம்

351 0

university-of-peradeniyaபேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து அங்கிருந்து தமிழ், முஸ்லிம் மாணவர்கள் ஒட்டுமொத்தமாக வெளியேறியுள்ளனர்.விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்களை வெளியேறவேண்டாமென பல்கலைக்கழக நிர்வாகம் தடுத்தபோதும் மாணவர்கள் அதனைப் புறக்கணித்துள்ளனர். வடக்குக் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மாணவிகளே இவ்வாறு வெளியேறியுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக இது இருக்கலாம் எனவும், 15 மாணவர்கள் தாக்கப்பட்டபோதும் 4 மாணவர்களே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு தாக்குதல் நடாத்தப்பட்ட இந்தச் சம்பவமானது தமிழ் மாணவர்களின் கற்றல் நடவடிக்கையை கேள்விக்குட்படுத்தியுள்ளது.