ட்ரெவிஸ் சின்னையாவுக்கு பதவி உயர்வு

215 0
கடற்படை தளபதியாக சேவையாற்றி இன்றைய தினம் ஓய்வுப்பெறவுள்ள வைஸ் அட்மிரால் ட்ரெவிஸ் சின்னையா, அட்;மிராலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவருக்கு இன்று பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
ட்ரெவிஸ் சின்னையா கடந்த 35 வருடக்காலங்களாக கடற்படையில் சேவையாற்றியுள்ளார்.
அவர் தற்போது ஓய்வு பெறும் நிலையில், கடற்படையின் புதிய தளபதியாக நேற்றைய தினம் எஸ்.எஸ் ரணசிங்க நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment