மஹிந்த அணியும், சுதந்திர கட்சியும் ஒன்றுப்படும் 

205 0
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மகிந்த அணியினரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைவதற்கு பெரும்பாலும் இடமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
தற்போது இரு தரப்பிலும் உள்ள சிரேஷ்ட உறுப்பினர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகிறது.
இதன்படி உள்ளுராட்சிமன்ற தேர்தலில் பெரும்பாலும் இரு தரப்பினரும் இணைந்து போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் இசுரு தேவப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment