வெலிக்கடை சிறைச்சாலையின் மனநோயாளர் பிரிவு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர், மற்றுமொரு மனநோயால் பாதிக்கப்பட்ட சந்தேக நபரின் தாக்குதலுக்கு இலக்காகி கடந்த செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சந்தேக நபர் முஹம்மட் அபூபக்கர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி முதல் அவர் வெலிக்கடை சிறைச்சாலையின் மனநோயாளர் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவரின் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ள குடும்ப உறவினர்கள் எவரும் முன்வரவில்லை எனவும், குறித்த நபர் மனநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் என தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவர் தொடர்பில் மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் பொரல்லை பொலிஸ் நிலையத்தின் 011-2696950, 077-7264299 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

