யாழில் துப்பாக்கிச் சூட்டு விசாரணையை மேற்கொள்ள விசேட குற்றத் தடுப்பு விசாரணை குழு!

376 0
யாழ்ப்பாண மணியம் தோட்டம் உதயபுரம் பகுதியில் இளைஞர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக கொழும்பில் இருந்து விசேட குற்றத் தடுப்பு விசாரணை குழுவொன்று நாளை யாழ்ப்பாணம் செல்லவுள்ளது.
காவற்துறைமா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவினால் இந்த விசாரணை குழு நியமிக்கப்பட்டது.
கடந்த 22 ஆம் திகதி யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் உதயபுரம் பகுதியில் சிவில் உடையில் வந்த சிலர் குறித்த இளைஞர் மீது துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொண்டனர்.
இதன்போது அந்த இளைஞர் உயிரிழந்தமை குறிப்பிடதக்கது.

Leave a comment