பாராளுமன்றம் மீது குண்டுத் தாக்குதல் நடத்த வேண்டும் என, விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளமை, தமது கட்சியின் கருத்து அல்ல என, தேசிய விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பியசிறி விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
அது தமது கட்சித் தலைவரான விமல் வீரவங்சவின் தனிப்பட்ட கருத்து எனவும் அவர் கூறியுள்ளார்.
கம்பஹா பகுதியில் வைத்து ஊடகவியலாளர்களை சந்தித்த போதே பியசிறி விஜேநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.