விமல் தொடர்பில் விரைவில் நடவடிக்கை- சபாநாயகர்

305 0

நாடாளுமன்றத்துக்கு குண்டுத் தாக்குதல் நடத்த வேண்டிய தேவை உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வெளியிட்ட அறிவிப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சபாநாயகரின் ஊடகப் பிரிவு இன்று விடுத்துள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும், மக்கள் பிரதிநிதிகளின் உயிருக்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இந்த அறிவிப்பு குறித்து, முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களாலும், ஏனைய தரப்பினராலும் சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு ஆரம்பித்தவுடன், குறித்த அறிவிப்பு தொடர்பில் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க சபாநாயகர் எதிர்பார்ப்பதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Leave a comment