சிறை திரும்பினார்- பேரறிவாளன்

286 0

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட இரண்டு மாதகால தற்காலிக விடுமுறைக் காலம் இன்றுடன் முடிவடைந்தது.

இதையடுத்து, அவர் இன்று சிறைக்கு திரும்பியதாக தமிழக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பேரறிவாளனுக்கு தற்காலிக விடுமுறை வழங்க வேண்டும் என்று அவரின் தாய் அற்புதம் அம்மாள் மனுவொன்றினூடாக தமிழக அரசிடம் கோரியிருந்தார்.

இதையடுத்து, வேலூர் மத்திய சிறைச்சாலையால் கடந்த ஓகஸ்ட் மாதம்  24 ஆம் திகதி பேரறிவாளனுக்கு தற்காலிக விடுமுறை வழங்கப்பட்டது.

பின்னர், அவரது தற்காலிக விடுமுறையை மேலும் ஒரு மாதம் நீடிக்க வேண்டும் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, பேரறிவாளனின் தற்காலிக விடுமுறைக் காலம் மேலும் ஒரு மாதம் நீடிக்கப்பட்டது.

இந்த நிலையில், அவரது இரண்டுமாத கால தற்காலிக விடுமுறைக்காலம் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் அவர் சிறைக்கு இன்று திரும்பியுள்ளார்.

Leave a comment