வவுனியா உக்குளாங்குளத்தில் மாதா சிலை எரிப்பு

10919 0

வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் அமைந்துள்ள மாதா சிலை விசமிகளால் உடைத்து எரிக்கபபட்டுள்ளது.

வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக காணப்படடு வந்த வேளாங்கன்னி மாதா சிலை அப்பகுதி கிறிஸ்தவ மக்களின் வணக்க தலமாகவும் காணப்பட்ட நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில் இனந்தெரியாதோரால் சிலை வைக்கப்பட்டிருந்த கண்ணாடி கூடு உடைக்கப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளது.

அதேவேளை கண்ணாடி கூட்டுக்க வெளியில் காணப்பட்ட சிறிய சிலையொன்றும் எரியூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன் இச் சம்பவம் தொடர்பாக பண்டாரிக்குளம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment